;
Athirady Tamil News

கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயிலின் எக்ஸ்கியூட்டிவ் கோச்சில் தண்ணீர் கசிவு!!

0

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்றிரவு காசர்கோடு சென்றடைந்தது. அங்கு பயணிகள் இறங்கிய பின்னர் ரெயிலை சுத்தம் செய்ய கண்ணூர் ரெயில் நிலையம் கொண்டு வரப்பட்டது. அப்போது கண்ணூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வந்தே பாரத் ரெயிலின் எக்ஸ்கியூட்டிவ் கோச்சில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது.

இதனை ரெயில் பராமரிப்பு பணி ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனடியாக அவர்கள் ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தண்ணீர் கசிவை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகள் உடனடியாக முடிந்து விடும் என்றும் இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு இருக்காது என ரெயில்வே துறையினர் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.