;
Athirady Tamil News

ஜெயிலுக்கு அனுப்பியதால் ஆத்திரம் மனைவி துண்டு துண்டாக வெட்டிக் கொலை- கணவன் தூக்கிட்டு பலி!!

0

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் வீரபாளையத்தை சேர்ந்தவர் பாவிடு (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (35) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த பாவிடு மது குடிக்க ஆரம்பித்தார். போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டார். இதனை தடுக்க வந்த அவரது மகள்களையும் அடித்து உதைத்தார். நீண்ட நாட்களாக கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. கணவனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நிர்மலா இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ள தாடே பள்ளிக்கூடேம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் கணவன் மனைவி இருவரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதற்குப் பிறகும் பாவிடு மது போதையில் மனைவியை கொடுமைப்படுத்தினார். இதனால் மீண்டும் நிர்மலா போலீஸ் நிலையத்திற்கு சென்று கணவன் மீது புகார் அளித்தார். போலீசார் பாவிடுவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாவிடு ஜெயிலில் இருந்து வெளியே வந்தார்.

அவருடைய உறவினர்கள் கணவன் மனைவி இருவரையும் சாமாதானம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பாவிடு, நிர்மலா இருவரும் ஒரு அறையிலும், அவருடைய மகள்கள் மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலையில் பாவிடு கண் விழித்தார். ஜெயிலுக்கு அனுப்பியதால் மனைவியின் மீது அவருக்கு தீராத கோபம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தூங்கிக் கொண்டிருந்த நிர்மலாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டாக வெட்டி எடுத்தார். அந்தத் தலையை 3 துண்டுகளாக வெட்டி வீசினார். மேலும் நிர்மலாவின் 2 கைகளை துண்டு துண்டாக வெட்டி அறையில் இருபுறமும் தூக்கி எறிந்தார். சத்தம் கேட்டு கண்டுவிழித்த அவரது மகள்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் தாய்க்கிடந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் அலறி கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.அதற்குள் பாவிடு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து நிர்மலாவின் உடலை மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பாவிடுவை தேடி வந்தனர். இந்நிலையில் தப்பி ஓடிய பாவிடு ஊருக்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோரை இழந்த அவரது 2 மகள்கள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.