;
Athirady Tamil News

உக்ரைன் மக்களை அச்சுறுத்த எல்லை மீறிய ரஷ்ய படைகளின் நடவடிக்கை..!

0

ரஷ்யா படைகள் உக்ரைனின் சில முக்கிய நகரங்களை குறி வைத்து நடத்திய ஆகாய வழித் தாக்குதல்களில் இரண்டு பிள்ளைகள் உட்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 12 ஏவுகணைகள் உக்ரேனிய நகரங்கள் மீது பாய்ச்சப்பட்டதுடன், உமான் எனும் நகரம் மிகவும் மோசமாக சிதைவடைந்துள்ளது.

உக்ரைன் மக்களுக்கு பீதியை ஏற்படுத்த குறித்த மோசமான தாக்குதல்களை ரஷ்யா நடத்துவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரைனின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைனிய இராணுவத்தை குறிவைத்தே குறித்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறியுள்ளது.

இதேவேளை, உக்ரைன் தலைநகர் கீயூவில் அதிகாலையில் ஆகாயத் தாக்குதல் எச்சரிக்கை சமிஞ்சை ஒலிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ரஷ்யாவுக்கு எதிராக அனைத்துலக ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதை இந்த மோசமான தாக்குதல் காட்டுவதாக உக்ரைனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.