;
Athirady Tamil News

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன ஆச்சு தெரியுமா?!!

0

பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு கொள்வதால், பெற்றோர் இவ்வாறு செய்வதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டு இருந்தன. இதுபற்றிய செய்திகள் பரவலாக வெளியாகி வந்த நிலையில், இந்த சம்பவம் பற்றிய உண்மை தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பு மற்றும் எழுத்தாளர் ஹாரிஸ் சுல்தான் பதிவிட்ட டுவிட்டர் பதிவுகளின் அடிப்படையில் தான் இந்த செய்திகள் வெளியாக துவங்கின. இது பற்றிய செய்திகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் எடுக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில், சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக வைரலான கல்லறை புகைப்படம் ஐதராபாத்தில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் ஐதராபாத்தில் கல்லறைகளை தோண்டியெடுத்து, அதே இடத்தில் மற்றவர்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படுவதை தடுக்கவே கல்லறைகளில் பூட்டு போடப்பட்டுள்ளன.

இதுதவிர வைரல் புகைப்படத்தில் இருந்த கல்லறை நுழைவு வாயில் அருகிலேயே இருப்பதால், மற்றவர்கள் இதன் மீது ஏறுவதை தடுக்கும் வகையில் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டியின் மகன் இவ்வாறு செய்திருக்கிறார் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளியான மற்றொரு செய்தியில் பாகிஸ்தான் நாட்டில் சடலங்களுடன் உடலுறவு கொள்ளும் சம்பவம் 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் கராச்சியை அடுத்த வடக்கு நசிம்பாத்தில் நபர் ஒருவர் 48 பெண் சடலங்களுடன் உடலுறவு கொண்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.