லண்டனில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற கரும்புலிகள் நினைவேந்தல்
லண்டனில் கரும்புலிகள் நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
புலம்பெயர் தமிழ் மக்களின் ஏற்பாட்டில் லண்டன், மிச்சம் நகரில் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது கரும்புலிகளின் திருவுருவப் படங்களுக்கு தீபம் ஏற்றியும், மாலை அணிவித்தும், மலர் சொரிந்தும் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், கரும்புலிகள் தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றன. நிகழ்வில் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
