;
Athirady Tamil News

உச்சம் தொட்ட ஜிஎஸ்டி வரி வசூல்… இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி: பிரதமர் மோடி கருத்து!!

0

இந்தியாவில் ஜிஎஸ்டி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவ்வகையில், கடந்த மாதத்தில் (ஏப்ரல்) ஜிஎஸ்டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு, ஏப்ரல் 2022ல் அதிகபட்சமாக ரூ.1,67,540 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகியிருந்தது.

அதை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வசூல் ரூ.19,495 கோடி அதிகம் ஆகும். இது இந்திய பொருளாதாரத்திற்கு நல்ல செய்தி என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். குறைந்த வரி விகிதங்கள் இருந்தாலும், வரி வசூல் அதிகரித்து வருவது, ஜிஎஸ்டி ஒருங்கிணைப்பின் வெற்றியை காட்டுவதாகவும் பிரதமர் கூறி உள்ளார். இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.