;
Athirady Tamil News

கூடாரமொன்றில் இரவைக் கழித்த இளம் பெண் உயிரிழப்பு !! (வீடியோ)

0

கொஸ்லாந்தை – உடதியலும பகுதியில் கூடாரம் அமைத்து இரவுப் பொழுதை கழித்த இளம் ஜோடியை காட்டு யானை தாக்கியதில், யுவதி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தனுஷ்க மற்றும் இயூஜின் (23) ஆகியோர் சமூக வலைத்தளத்தில் ‘Danuwa with Iyujin’ என்ற பெயரில் பிரபலமானவர்கள்

நாடளாவிய ரீதியில் சுற்றுப் பயணங்கள் செய்து, சமூக வலைத்தளத்தில் கண்கவர் காட்சிகளை இவர்கள் பதிவேற்றி வந்தனர்.

அவ்வாறான எழில்மிகு காட்சிகளை பதிவு செய்வதற்காக நேற்று மாலை 6.30 மணியளவில் உடதியலுமை பகுதிக்கு இந்த இளம் ஜோடி சென்றிருந்தது.

எனினும், இந்த பயணம் இயூஜினின் இறுதிப் பயணமாகவே அமைந்தது.

காட்டு யானை தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிராம மக்கள் இன்று காலை சென்று பார்த்த போது தனுஷ்க மதுஷான் காயமடைந்த நிலையில் இருந்துள்ளார்.

23 வயதான கவிசா இயூஜின் உயிரிழந்துள்ளார்.

மாத்தறை – கெக்கனதுர பகுதியை சேர்ந்த இவர் மாத்தறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தாதியாக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.