;
Athirady Tamil News

2030-க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப சீனா திட்டம்!!

0

சீனா கடந்த காலங்களில் வெற்றிகரமாக சந்திரன் மற்றும் செவ்வாய் கோளுக்கு ரோவரை அனுப்பி உள்ளது. அதேபோல் 2021-ல் சீனாவும், ரஷியாவும் சர்வதேச சந்திர ஆராய்ச்சி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்தன. இந்தநிலையில் விண்வெளி போட்டிகள் தற்போது தீவிரம் அடைந்து வரும் நிலையில் வருகிற 2030-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீனா நேற்று அறிவித்தது.

இதன் மூலம் மனிதர்களை நிலவில் தரை இறக்குவது, நிலவினை ஆய்வு செய்தல் மற்றும் அது தொடர்பான தொழில்நுட்ப பரிசோதனைகளை மேற்கொள்வதே தனது இலக்கு என சீனா கூறி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.