;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரின் வீட்டில் திருட்டு !!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான சமிந்த சிறிசேனவின் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெறுமதியுடைய, சுமார் 6 பவுன் தங்க மோதிரம், ஐம்பது அமெரிக்க டொலர் மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, அதுமல்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மேற்குறிப்பிட்ட நீலக்கல் மோதிரம் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளதாக அவர் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலன்னறுவை பொலிஸார், மோதிரம் மற்றும் பணத்தை திருடியவர்கள் யார் என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.