;
Athirady Tamil News

சுமார் 5,400 பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பான செய்தி!!

0

அமைச்சர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத சில நபர்களுக்காக சுமார் 5,400 சிறப்பு காவலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பில் அறிக்கையொன்றை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் மறுஆய்வு செய்யப்படும் என்றும், அதன் பிறகு சிறப்பு காவலர்கள் நீக்கப்படுவார்கள் அல்லது சேவைத் தேவையின் அடிப்படையில் குறைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் கூறினார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.