;
Athirady Tamil News

குட்கா கடத்தி சென்ற வாலிபரை மடக்கி பிடித்த போலீசார்: 100 கிலோ குட்கா-கார் பறிமுதல்!!

0

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாநில எல்லையான ஜூஜூவாடி சோதனை சாவடியில் ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் நோக்கி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர். ஆனால், காரில் இருந்த நபர் காரை அங்கு நிறுத்தாமல் அதிவேகத்தில் எடுத்து சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் இது குறித்து உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். ரோந்து வாகன போலீசார் அந்த காரை ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 15 கிலோ மீட்டர் தூரம் வரை விரட்டி சென்றுள்ளனர். போலீசார் காரை பின் தொடர்ந்து துரத்துவதை பார்த்த காரில் இருந்த நபர் தேசிய நெடுஞ்சாலையில் சப்படி என்ற இடத்தில் சாலை ஓரமாக நிறுத்தி விட்டு அருகிலுள்ள ஏரி பகுதிக்கு தப்பி ஓடினார். காரை பின்தொடர்ந்து வந்த போலீசார் ஏரி பகுதிக்கு ஓடிச் சென்ற அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர்.

சோதனையில் அந்த காரில் 5 மூட்டையில் சுமார் 100 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்துள்ளது தெரிய வந்தது. போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் வட மாநிலத்தை சேர்ந்த ஹனுமான் என்பதும் கர்நாடக மாநிலம் ஜிகினி பகுதியில் இருந்து கோயம்புத்தூருக்கு குட்கா பொருள்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து குட்கா கடத்தி வந்த அனுமானை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து கார் மற்றும் 100 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.