பாடசாலை மாணவர் ஒருவர் பலி!!
லக்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆற்றில் நேற்று (11) பிற்பகல் நீராடச் சென்ற மாணவர்கள் குழுவில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஹலாவத்த பிரதேசத்தில் வசிக்கும் 17 வயதான மாதம்பே என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுற்றுலா வந்த குறித்த மாணவர்கள், மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை பார்வையிட்டதன் பின்னர் தொரபிட்டிய ஆற்றில் நீராடச் சென்ற வேளையில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது..
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.