;
Athirady Tamil News

இவரை கண்டால் உடன் தகவல் தாருங்கள்!!

0

பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, லெஸ்லி, ரணகல மாவத்தை பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் கடந்த மே மாதம் 20ஆம் திகதி, டி – 56 ரக துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றவிசாரணை பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் தற்போது அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளாா்.

புஷ்பராஜ் விக்னேஷ்வரன் என்ற 27 வயதுடைய, 131/47/47, ஜம்பட்டாவீதி, கொழும்பு 13ஐ வசிப்பிடமாக கொண்ட, மீன் வியாபாரி என்பவரே தேடப்படுபவராவார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள்,

பணிப்பாளர் குற்றப்பிரிவு :- 071 – 8591733

எல்லை குற்றப்பிரிவு :- 071 – 8591735

விசாரணை பிரிவு 1 :- 071 – 8596503க்கு தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.