;
Athirady Tamil News

மக்களே… உங்களுக்கு இவர்களைத் தெரியுமா?

0

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் வீடொன்றுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த வெளிநாட்டு நாணயம் மற்றும் சொத்துக்களை திருடிச் சென்ற சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.

கடந்த 12ஆம் திகதி பகலில் இந்த வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபர்கள் இருவரும் பணிப்பெண்ணை அச்சுறுத்தி 10,707,800 ரூபா பெறுமதியான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பணம், தங்கப் பொருட்கள் அடங்கிய சிறிய பெட்டகத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

பாதுகாப்பு கமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பொரலஸ்கமுவ நிலைய கட்டளைத் தளபதி 071-8591646 மற்றும் பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்தின் 011-2150769 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.