;
Athirady Tamil News

அற்புத சக்தி இருப்பதாக கூறி பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தெலுங்கானாவில் தமிழக போலி சாமியார் கைது !!

0

தமிழகத்தை சேர்ந்த 58 வயது சாமியார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள வாரங்கல் ஏனுமாமுலா மார்க்கெட் பகுதியில் வசித்து வருகிறார். தன்னிடம் அற்புத சக்தி உள்ளது. மேலும் சூனியம் செய்யக்கூடிய சக்தி இருப்பதாக கூறி மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் குறைதீர்க்க வரும் பெண்களை தனிமையில் பூஜை செய்ய வேண்டுமென அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இவர் அற்புத சக்தி இருப்பதாக கூறி பெண்களை பாலியல் ஆசைக்கு அடிபணிய செய்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவி கேட்டு சாமியாரிடம் சென்றார். Powered By VDO.AI பெண்ணை தனி அறையில் வைத்து சில மாந்திரீக வார்த்தைகளை கூறி பூஜை செய்தார். அப்போது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு ஓடிச்சென்றார்.

நடந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலி சாமியார் என்பதால் கூடுதலாக அதிரடிப்படை போலீசார் விரைந்தனர். போலி சாமியாரின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு பல்வேறு மாந்திரீக புத்தகங்கள் எலுமிச்சை பழங்கள் ஆயுர்வேத பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலி சாமியாரை கைது செய்தனர். போலி சாமியார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர். தொடர்ந்து எத்தனை பெண்களிடம் போலி சாமியார் அத்துமீறலில் ஈடுபட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.