;
Athirady Tamil News

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே பயங்கர தீ விபத்து!!

0

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோவில் அருகே உள்ள கடையில் இன்று பிற்பகலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார மற்றும் தீயணைப்பு வீரர்கள் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், கோவிலுக்கு அருகில் உள்ள போட்டோ பிரேம் கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக திருப்பதி காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.