;
Athirady Tamil News

அமலாக்கத்துறையே அவருக்கு பாதுகாப்பு!- எச்.ராஜா சொல்கிறார்!!

0

பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரான எச்.ராஜா கூறியதாவது:- அமித் ஷாவின் தூண்டுதலால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்ததாக சொல்வது அபத்தமானது. அமித்ஷா சென்னைக்கு வருவதற்கு முன்பே செந்தில் பாலாஜி தொடர்பான பல இடங்களில் ரெய்டு நடந்து கொண்டுதான் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அதில் கிடைத்த ஆவணங்கள் அடிப்படையில் தொடர்ந்து ரெய்டு நடந்திருக்கலாம்.

தற்போதைய சூழலில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் பாதுகாப்பானது. என்னை பொறுத்தவரை தற்போதைய சூழலில் தி.மு.க.வினரிடம் அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று தோன்றவில்லை. அமலாக்கத்துறை மட்டுமே செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு விசாரணை நடத்தும். அதன் மூலம் பல உண்மைகளும் வெளிவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.