;
Athirady Tamil News

42 மில்லியன் லொட்டரி பணம் – கனேடியருக்கு தேடிவந்த அதிர்ஸ்டம் !!

0

கனடாவில் லொட்டோ 6/49 லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவர் 42 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளார்.

ஒன்றாரியோ மாகாணத்தின் நயகரா நீர் வீழ்ச்சிப் பகுதியில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த லொட்டோ லொத்தர் சீட்டு பரிசிலுப்பு மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 28ம் திகதி வென்றெடுக்கப்பட்ட 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகை இதுவரையில் உரிமை கோரப்படவில்லை எனத் லொட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை குறித்த லொத்தர் சீட்டு எதிர்வரும் 28ம் திகதியுடன் காலாவதியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.