;
Athirady Tamil News

சூடான் வான்வெளி தாக்குதல் – 17 பேர் பலி !!

0

சூடான் தலைநகரான கார்டூமின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களில், 5 குழந்தைகளும் உள்ளடங்குவதாக அந்நாட்டு சுகாதார துறை சமூக வலைத்தளங்களில் தெரிவித்துள்ளது.

அத்துடன், முதற்கட்ட ஆய்வுகளின்படி, ஒட்டுமொத்தமாக 25 வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக சூடான் இராணுவத்திற்கும் அதன் துணை இராணுவத்திற்கும் இடையே நடைபெற்று வருகின்ற உள்நாட்டு போரில் அதிகமாக அந்நாட்டு சிறுவர்களே பாதிக்கப்பட்டு வருவதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரை நடைபெற்ற மோதலில் சுமார் 2000 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

அத்துடன், இந்தப் போரினால் டார்பூர் பகுதியை சேர்ந்த 2.2 மில்லியன் சூடான் மக்கள் இடம்பெயர்ந்து மனிதாபிமானப் பேரிடருக்கு (humanitarian calamity) முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.