;
Athirady Tamil News

மத்தியபிரதேசத்தில் மாயமான காதல் ஜோடி சுட்டுக்கொலை!!

0

மத்தியபிரதேச மாநிலம் மோரினா மாவட்டம் பாலுபுரா அருகே உள்ள ரத்தன் பசாய் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்பால் சிங். இவரது மகள் சிவானி (வயது18). இவருக்கும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ராதேஷ்யம் (21) என்ற வாலிபருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு 2 வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. அதுவும் சிவானி குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். காதலனை மறந்து விடும் படி கூறினார்கள். இதனால் காதல் ஜோடியினர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு அவர்கள் திடீரென மாயமானார்கள். இதுபற்றி ராதேஷ்யம் தந்தை போலீசில் புகார் செய்தார். தனது மகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிப்பதாக அவர் புகாரில் தெரிவித்து இருந்தார். போலீசார் காதல் ஜோடியை தேடி வந்தனர்.

ஆனாலும் அவர்களை பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் போலீசாரின் சந்தேக பார்வை சிவானி குடும்பத்தினர் மீது திரும்பியது. போலீசார் அவரது தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காதல் ஜோடியை சிவானியின் தந்தையே துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. மேலும் 2 பேரது உடல்களை இரவோடு இரவாக ஒருபெரிய கல்லில் கட்டி சம்பல் ஆற்றில் வீசிவிட்டனர். அந்த ஆறு அதிகம் முதலைகள் நிறைந்தது ஆகும். இதையடுத்து போலீ சார் காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களின் உடல்களை முதலைகள் கடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.