;
Athirady Tamil News

மணிப்பூர் கலவரம் எதிரொலி- இணையச்சேவை தடை வரும் 25ம் தேதி வரை நீட்டிப்பு!!

0

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மாதம் 3ம் தேதி முதல் இணையச் சேவைக்கு தடை நீடித்து வருகிறது. மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினருக்கு இடையே கடந்த மாதம் தொடக்கத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மணிப்பூர் கலவரம் மற்றும் அதன் பிறகான வன்முறையில் 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இதனால், இணையச் சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 10ம் தேதி தடையை நீட்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்தது.

வெறுப்புணர்வைத் தூண்டக் கூடிய புகைப்படங்கள், வீடியோக்கள், பேச்சுகளை பரப்ப சில சமூக விரோத சக்திகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்பதால் இணையச் சேவை தடை 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, இம்பாலில் கடந்த வாரம் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மணிப்பூரில் இணையத்தள சேவைக்கான தடை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.