;
Athirady Tamil News

வரதட்சணை வழக்கில் நீதிமன்றத்தில் 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக செலுத்திய வினோதம்!!

0

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தஷ்ரத் குமாவாத் என்பவர் வழக்கில்தான் இந்த வினோதம் நடைபெற்றுள்ளது. இவருக்கு சுமார் 10 வருடத்திற்கு முன் சீமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. Powered By VDO.AI திருமணம் முடிந்த சில வருடங்களில் தஷ்ரத் குமாவாத் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஜெய்பூராஸ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் மனைவியின் பராமரிப்பிற்காக 2.25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த தொகையை தஷ்ரத்தால் செலுத்த முடியவில்லை. இதனால் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜெயிலில அடைக்கப்பட்டுள்ள தஷ்ரத்தின் உறவினர்கள் அவரை வெளியில் கொண்டு வர முயற்சி மேற்கொண்டனர். இதனால் சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை முதல் தவணையாக நீதிமன்றத்தில் செலுத்த தொடங்கினார். வரதட்சணை புகார் அளித்த தஷ்ரத்தின் மனைவி பணத்தை எண்ணிஎண்ணி சோர்வாகிட வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ…. முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை ஏழு பெட்டிகள் வைத்து கொண்டு வந்தனர். இதனால் நீதிபதி வியப்படைந்தார். இதெல்லாம் என்னது என கேட்க… ஐயா… நாங்கள் தஷ்ரத்தின் உறவினர்கள்.

தஷ்ரத் கட்ட வேண்டிய பணத்தில் முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக கொண்டு வந்துள்ளோம். ஏழு பெட்டிகளில் 280 கிலோ எடைகொண்டது என்றனர். என்ன இருந்தாலும் இதை புறந்தள்ளிவிட முடியாது என்பதால் பணத்தை எண்ணி பாதுகாக்கும்படி உத்தரவிட்டார். நாணயங்களாக வழங்குவது வேண்டுமென்றே துன்புறுத்தல் செயலாகும். இது மனிதாபிமானமற்ற செயல் என்று சீமாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டினார். ஆனால் தஷ்ரத் சார்பில் ஆஜரான வக்கீல், நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்க இந்திய பணம ஆகும் என்றார். 55 ஆயிரம் ரூபாயும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக இருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.