;
Athirady Tamil News

இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவிப்பு !!

0

விஸா காலம் முடிவடைந்து இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணத்தை அதிகரிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, விஸா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 7 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விஸா கட்டணத்திற்கு மேலதிகமாக 250 டொலர் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஸா காலம் முடிவடைந்து நாட்டில் சட்டவிரோதமாக 14 நாட்கள் தங்கியிருக்கும் வெளிநாட்டவர் ஒருவரிடமிருந்து விஸா கட்டணத்திற்கு மேலதிகமாக 500 டொலர் அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.