;
Athirady Tamil News

பண்டாரிக்குளத்தில் வாள் வெட்டு இருவர் படுகாயம்! வாள் வெட்டு கும்பல் அட்டகாசம்!!

0

வவுனியா பண்டாரிக்குளத்தில் நேற்று இரவு (29) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் மூவர் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது…

பண்டாரிக்குளம் அம்மன் கோவில் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மது போதையில் அட்டகாசம் செய்து வந்த நிலையில் குறித்த கிராமத்தை சேர்ந்த, கிராம அபிவிருத்தி சங்கம் , கோவில் நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக குழுக்களை சேர்ந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்ட இளைஞர்களை அங்கிருந்து செல்லுமாறு கோரியுள்ளனர்.
இந்நிலையில் கிராமத்திலுள்ளவர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் , வாள் வெட்டில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவம் பற்றி கிரம மக்கள் கருத்து தெரிவிக்கையில்..

அயல் கிராமத்தில் இருந்து சில இளைஞர்களை அழைத்து வந்து பண்டாரிக்குளம் கிராமத்தில் மது போதையில் இருந்த இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கிய போதும் அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் வவுனியா விசேட அதிரடிப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் , வவுனியா கோவில் குளம் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.