;
Athirady Tamil News

தாய்லாந்து சென்றது முத்துராஜா!!

0

தாய்லாந்தில் இருந்து நன்கொடையாக பெறப்பட்ட “சக்சுரின்” அல்லது “முத்துராஜா” என்ற யானை இன்று (02) காலை தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யானையை ஏற்றிய விமானம் காலை 07.30 மணியளவில் தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாய்லாந்தில் இருந்து இந்நாட்டிற்கு வந்த மூன்று கால்நடை வைத்தியர்கள், ஒரு யானைப் பண்ணையாளர் மற்றும் இரண்டு உதவியாளர்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

இந்த விமானத்திற்காக தயாரிக்கப்பட்ட விசேட கூண்டுடன் பழகுவதற்கு “முத்துராஜா” யானைக்கு சுமார் ஒரு மாத காலம் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.

2001 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசாங்கம் “சக்சுரீன்” என்ற யானையை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், யானையின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், அதனை தாய்லாந்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.