;
Athirady Tamil News

வாக்களித்தவர்களுக்கு சாபங்கள் சென்றடைய வேண்டும்!!

0

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி பயனாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும்.

தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் இன்னொரு மோசடியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (1) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதலாவது மோசடி, மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என அறிந்தும் வெளிநாட்டு கடன் டொலரில் செலுத்தப்பட்டது.

தற்போது கடன் மறுசீரமைப்பு ஊடாக மற்றுமொரு மோசடி இடம்பெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் இன்னொரு மோசடியாகும் என அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.