;
Athirady Tamil News

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரிகள் கவுன்சில் கூட்டம்!!

0

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியின் அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்த கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மூத்த மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி நேற்று டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் ஆலோசனை நடத்தினார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க இருக்கும் நிலையில், அதில் கடைப்பிடிக்க வேண்டிய அரசின் நிலைப்பாடுகள் குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பலன் நிறைந்த மந்திரிகள் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பன்முக கொள்கை தொடர்பான விவகாரங்களில் பார்வைகளைப் பரிமாறிக் கொண்டோம் என பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.