;
Athirady Tamil News

சினிமாவை மிஞ்சும் காட்சி…. டேங்கரில் கடத்தப்பட்ட மாடுகள்- அதிர்ந்து போன அதிகாரிகள்!!

0

அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூர் பகுதியில் எண்ணெய் டேங்கரில் இருந்து ஏராளமான கால்நடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். குவஹாத்தி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சோனாபூரில் தேசிய நெடுஞ்சாலை 37-ல் சென்ற லாரியை மடக்கி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது 25 பசுக்கள் மற்றும் 11 இறந்த கால்நடைகளை லாரியில் இருந்து போலீசார் மீட்டனர். உரிய ஆவணங்கள் ஏதுமின்றி கால்நடைகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.