;
Athirady Tamil News

திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 11-ந் தேதி நடக்கிறது!!

0

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 11-ந் தேதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.

இதன் ஒரு பகுதியாக காலை 6 மணிக்கு தொடங்கும் திருமஞ்சனம் நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். திருமஞ்சன நிகழ்ச்சி முடிந்ததும் சுவாமி மூலவிரட்டுக்கான பூஜை நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர்கள் செய்வார்கள். அதன்பின், பகல் 12 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.