;
Athirady Tamil News

நண்பனை தண்ணீர் பாட்டில் வாங்க அனுப்பிவிட்டு கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்!!

0

தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவருடைய நண்பர் அகில். அன்வேஸ் அவரது காதலியுடன் அங்குள்ள ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார். அப்போது அகில் எனது தோழி ஒருவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து வருகிறார். அவளையும் கோவிலுக்கு அழைத்து வருகிறேன் என தெரிவித்தார் . திட்டமிட்டபடி அன்வேஷ் அவரது காதலி மற்றும் அகில் அவரது தோழியான கல்லூரி மாணவி ஆகியோர் காரில் கோவிலுக்கு சென்றனர். நேற்று கோவிலில் இருந்து கல்லூரிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

வழியில் அன்வேஷ் தனது காதலியை வெங்கடாபூர் என்ற இடத்தில் இறக்கி விட்டார். பின்னர் அகில் மற்றும் அவரது தோழி ஆகியோருடன் காரில் சென்றனர். கோமாடிப்பள்ளி சோதனை சாவடி அருகே வந்தபோது அகிலின் தோழி காரை நிறுத்தும்படி கூறிவிட்டு அருகில் உள்ள புதர் பகுதிக்கு இயற்கை உபாதை கழிக்க சென்றார். அவளது அழகில் மயங்கிய அன்வேஷ் அவளை அடைய வேண்டும் என திட்டமிட்டார். உடனே அவரது நண்பர் அகிலிடம் காரிலிருந்து இறங்கி கடைக்கு சென்று தண்ணீர் பாட்டில் வாங்கி வரும்படி கூறினார். அதன்படி அகில் காரில் இருந்து இறங்கி கடைக்கு சென்றார்.

அந்த நேரத்தில் அன்வேஷ் புதர் பகுதிக்குச் சென்ற கல்லூரி மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அகில் வருவதற்குள் இருவரும் காருக்கு வந்தனர். அப்போது கல்லூரி மாணவி அழுது கொண்டே இருந்தாள். இது பற்றி அகில் கேட்டபோது அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். மாணவி விடுதிக்கு சென்றதும் செல்போன் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு நடந்த சம்பவம் பற்றி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக கே.யு.சி. போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து அன்வேஷை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.