;
Athirady Tamil News

மணிப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 3.3 ஆக பதிவு!!

0

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டம் அருகே 3.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டம் அருகே இன்று நள்ளிரவு சுமார் 12:14 மணியளவில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் 70 கிலோமீட்டர் ஆழம் வரை இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் இல்லை. முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை, அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங்கில் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நாளில், லடாக்கில் 4.7 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கார்கிலுக்கு வடக்கே 401 கிமீ தொலைவில் 150 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.