;
Athirady Tamil News

தவறுதலாக வீட்டு முகவரிக்கு ஆணுறை ஆர்டர் செய்த வாலிபர்- தாயின் கைக்கு கிடைத்ததால்…!!

0

அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஆன்லைனில் ஆணுறை (காண்டம்) ஆர்டர் செய்த ஒரு நபருக்கு நேர்ந்த கதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக டுவிட்டர் பயனரான எலினா என்பவர் வெளியிட்டுள்ள பதிவில், தனது சகோதரன் செய்த தவறினை பொது வெளியில் பகிர்ந்துள்ளார். அதில், மேஜையில் வைக்கப்பட்டிருந்த ஆணுறை பாக்கெட்டுடன் கூடிய வீடியோவை பதிவிட்டு, என்னுடைய சகோதரன் காண்டம் பாக்கெட்டை ஆர்டர் செய்துவிட்டு டெலிவரி செய்ய வேண்டிய முகவரியில் வீட்டின் முகவரியை நீக்குவதற்கு மறந்துவிட்டார்.

இதனால் அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்தபோது அதை தாய் வாங்கினார் என குறிப்பிட்டுள்ளார். கடந்த 4-ந் தேதி பகிரப்பட்ட இந்த பதிவு 7.8 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. மேலும் 5,400-க்கும் மேற்பட்ட விருப்பங்களை பெற்றுள்ளது. இதை பார்த்த பயனர்கள் இந்த சம்பவத்துக்கு உங்களது சகோதரர் எவ்வாறு பிரதிபலித்தார் என கேட்டுள்ளனர். அதற்கு, அந்த டுவிட்டர் பயனாளி, தனது போனை அணைத்துவிட்டதாக பகிர்ந்துள்ளார். இதே போல மற்ற பயனர்களும் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.