;
Athirady Tamil News

வேலணை கோட்டக் கல்வி விளையாட்டு போட்டி 2023!! ( படங்கள் இணைப்பு )

0

வேலணை கோட்ட கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான மெய்வன்மை திறனாய்வு போட்டி அண்மையில் வேலணை கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு. கா. சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது .

பிரதம விருந்தினராக திரு . சி. சபா ஆனந் ( யாழ் பல்கலைக்கழகம் உடற்கல்வி விஞ்ஞான அலகு தலைவர் / சிரேஷ்ட விரிவுரையாளர் ) அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. பொன் சகிலன் ( உதவிக் கல்விப் பணிப்பாளர் , உடற்கல்வி தீவகக் கல்வி வலயம் ) அவர்களும், கௌரவ விருந்தினர்களாக சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் மற்றும் திரு. கருணாகரன் குணாளன் ( செயலாளர் , புங்குடுதீவு உலக மையம் ) அவர்களும் கலந்து கொண்டனர். பல ஆண்டுகளுக்கு பின்னர் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் கோட்ட மட்ட போட்டிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. .

முதலிடத்தை புங்குடுதீவு மத்திய கல்லூரியும் , இரண்டாவது இடத்தை வேலணை மத்திய கல்லூரியும் தட்டிச்சென்றன.
தகவல்.. திரு.குணாளன் புங்குடுதீவு.

You might also like

Leave A Reply

Your email address will not be published.