;
Athirady Tamil News

பிரான்ஸ், யு.ஏ.இ. பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி!!

0

பிரான்ஸ் நாட்டு தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றார். இந்த அணிவகுப்பு விழாவில் இந்தியாவின் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. பிரான்ஸ் படைவீரர்களுடன் சேர்ந்து இந்திய படை வீரர்களும் அணிவகுப்பு நடத்தினர். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு பிரதமர் மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. மேலும், பிரான்சில் உள்ள இந்தியர்கள் மத்தியிலும் பிரதமர் மோடி உரையாற்றினார். பிரான்சில் தனது 2 நாள் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.

அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தார். துபாயில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டின் தலைவர் சுல்தான் அல் ஜாபரை சந்தித்துப் பேசினார். ஐக்கிய அரபு அமீரக அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் நஹ்யானை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் முடிவில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அதன்பின், அங்கிருந்து பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார். இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று இரவு டெல்லி திரும்பினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.