;
Athirady Tamil News

யாழில் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை!

0

இணைய விளையாட்டுக்கு அடிமையானமையால் ஏற்பட்ட மனவிரக்தியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த புஸ்பராசா எழில்நாத் (வயது – 22) என்ற கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகம் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தாயும், தந்தையும் நேற்று தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

முற்பகல் 11 மணியளவில் தந்தை வீடு திரும்பியுள்ளார். இதன்போது மகன் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் இருந்ததை பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.

இதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வீட்டில் இன்று இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்பட்டு கோம்பயன்மணல் இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.