;
Athirady Tamil News

X-Press பேர்ல் சேதம் பற்றிய பேச்சுவார்தை நாளை முதல் !!

0

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழு இன்று (17) சிங்கப்பூர் செல்லவுள்ளது.

X-Press Pearl கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவாரத்தை நடத்த இந்த பயணம் இடம்பெறுகின்றது.

அந்த குழுவின் தலைவராக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் சட்டத்தரணிகள் மற்றும் அதிகாரிகள் இதில் இணைந்து கொள்ளவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

X-Press பேர்ல் கப்பல் விபத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இழப்பீட்டுத் தொகை 6.4 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.