;
Athirady Tamil News

வட கொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடி !!

0

‘வடகொரியாவின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எங்கள் இராணுவத்தின் வலுவான பதில் அமைப்பு மற்றும் முத்தரப்பு ஒத்துழைப்புடன் திறம்பட பதிலளிப்போம்’ என தென்கொரியா கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறி வட கொரியா தொடர் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

அண்மையில் தங்களது வான்வெளிக்குள் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டிய வடகொரிய அரசாங்கம், தங்கள் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் அமெரிக்க உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் வட கொரியாவின் மிரட்டல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு கடற்படை ஏவுகணை பாதுகாப்பு ஒத்திகையை நடத்தியிருக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.