;
Athirady Tamil News

பதவியை மீளப் பெற விரும்புகிறார் ரஹ்மான்!!

0

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த சமகி ஜன பலவேஹய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனக்கு மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு, நிதியமைச்சர், நிதியமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிடும் மனுவை தாக்கல் செய்ய தற்போது தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாக ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பு மாநகரசபை மேயராக தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தான் பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்ததாகவும் ஆனால் உள்ளுராட்சித் தேர்தல் தற்போது காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேர்தலில் போட்டியிடவிருந்த அரச ஊழியர்களுக்கு அவர்களின் சம்பளம் சலுகைகள் மற்றும் அவர்களின் வேலைகள் மீள வழங்கப்பட்டுள்ளன. எனவே எனக்கும் எனது பதவியும் சிறப்புரிமைகளும் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என ரஹ்மான் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.