;
Athirady Tamil News

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் – மீண்டும் வர்த்தமானியில் வெளியிட தீர்மானம்!!

0

வடக்கு, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில், பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடினார்.

ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிவுகளை, ஜூலை 18 ஆம் திகதி வரைபுக் குழு ஆராய உள்ளது. திருத்தங்கள் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னர் சட்டமூலம் மீண்டும் வர்த்தமானியில் வெளியிடப்படுமென ஜனாதிபதி இங்கு உறுதியளித்தார்

அத்தோடு, ஊழல் ஒழிப்புச் சட்டம், எதிர்வரும் ஜுலை 19ஆம் திகதி பாராளுமன்றக் குழுநிலையில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும் என்றும், உயர் நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.