;
Athirady Tamil News

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி!!

0

அம்பலாந்தோட்டை, கொக்கல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொக்கல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், குறித்த வீட்டின் ஜன்னலின் வழியாக ஒருவரை தேடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் இந்த கும்பலை பார்த்து அலறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு, வெளியே சென்று பார்க்கும் போது வெளியே நின்றிருந்த மற்ற இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் அந்நபர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.