;
Athirady Tamil News

காசிமேடு மார்க்கெட்டில் ஆபாசமாக பேசிய வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கிய பெண்கள்!!

0

காசிமேடு பழைய கடலோரம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஏராளமான பெண்கள் வியாபாரம் செய்து வருகிறார்கள். இன்று காலை வாலிபர் ஒருவர் அங்கிருந்த பெண் வியாபாரிகளிடம் ஆபாசமாக பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் ஒன்று திரண்டு துடைப்பம், பிளாஸ்டிக் பைப்பால் அந்த வாலிபரை ஓட ஓட விரட்டி தாக்கினர்.

அடி தாங்க முடியாத அந்த வாலிபர் அங்கு மீன் வெட்டிக்கொண்டிருந்த ஒருவரது கத்தியை எடுத்து மிரட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. இதனால் மார்க்கெட் பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.