;
Athirady Tamil News

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை – மீளெச்சி பெரும் அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாத இயக்கங்கள் !!

0

அல்கொய்தா ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் மீண்டும் எழுச்சி பெற்று வருவதாக பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுவெல்லா பிரேவ்மேன் தெரிவித்துள்ளார்.

தீவிரவாத எதிர்ப்பு வியூகம் பற்றி புதிய அறிவிப்பை பிரித்தானியா அரசு வெளியிட்டுள்ளது.

அந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது, பிரித்தானியா உள்நாட்டு தீவிரவாதத்தை எதிர்க்கொண்டு வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இத்தீவிரவாத செயற்பாடுகள் கணிப்பதற்கு சாத்தியம் குறைவாகவும், புலனாய்வு செய்து விசாரணை நடுத்துவதற்கு கடுமையானதாகவும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் தற்போது தலை தூக்கியுள்ள தீவிரவாத செயற்பாடுகள் அவ்வளவு உச்சத்தில் இல்லை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.