;
Athirady Tamil News

மினுவங்கொடையில் துப்பாக்கிச் சூடு!!

0

மினுவாங்கொடை ஹொரம்பெல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் குழுவொன்று நேற்று (19) அப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்ய விசேட அதிரடிப்படையினர் சென்ற போது, குறித்த சந்தேகநபர் ​​டி-56 துப்பாக்கியால் சுட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, விஷேட அதிரடிப் படை அதிகாரிகளும் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், காயமடைந்த சந்தேக நபர் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் எனவும், அவர் குற்றவியல் கும்பலைச் சேர்ந்த முக்கிய துப்பாக்கிதாரி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.