;
Athirady Tamil News

மானிப்பாயில் தனியார் பேருந்து , சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்!!

0

யாழ்ப்பாணம் , மானிப்பாய் – காரைநகர் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தின் மீதும் , அதன் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து காரைநகர் – மானிப்பாய் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பேருந்தினை வழிமறித்த இனம்தெரியாத குழுவொன்று பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் காரைநகர் சிற்றூர்தி சங்கத்திற்கு அறிவித்துள்ளனர். அத்துடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.