;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – மலருக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன!!

0

யாழ்.மாவட்ட பண்பாட்டு பேரவையால் நடத்தப்படும் ,2023ஆம் ஆண்டுக்கான மாவட்ட பண்பாட்டு விழாவில் வெளியீடு செய்யப்படவுள்ள ” யாழ்ப்பாணம்” மலர் – 2 க்கான ஆக்கங்களை கோரியுள்ளனர்.

” யாழ்ப்பாணத்து மொழி வழக்கும் , தமிழிலக்கியமும்” எனும் தொனிப்பொருளில் ஆக்கங்கள் அனுப்பப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஆக்கங்கள் ஐந்து பக்கங்களுக்கு மேற்படாதவாறு , ஏ – 4 தாளில் பாமினி எழுத்துருவில் , எழுத்தளவு 12 ஆக (font – Bamini , font size -12) கணனியில் தட்டச்சு செய்து [email protected] எனும் முகவரிக்கு மென் பிரதியையும் ,அதன் வன்பிரதியை ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் தலைவர் , யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பேரவை , மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு நேரடியாகவோ , தபால் மூலமாகவே அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.