;
Athirady Tamil News

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு !!

0

எரிபொருள் ஒதுக்கீடானது மதிப்பீட்டின் பின்னர் அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார்.

அடுத்த 6 மாதங்களுக்கான எரிபொருள் திட்டம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் (CPC) மீளாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் டுவிட்டர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதித் திட்டங்கள், சுத்திகரிப்பு நடைமுறைகள், சுத்திகரிப்பு நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகள், QR கோட்டாக்கள், சேமிப்புத் திறன், எரிபொருள் நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் மற்றும் விநியோகம் போன்ற விடயங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டதுடன் கலந்துரையாடியதாக அவர் மேலும் குறிப்பிட்டு இருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.