;
Athirady Tamil News

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் ; தந்தை கைது!!

0

கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த சிறுமிகளின் தாய், வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளாதாகவும் தனது தந்தையின் பாலியல் வன்புணர்வை தாங்கிக்கொள்ள முடியாமையால், தங்களுக்கு நேர்ந்ததை அவ் இரு சிறுமிகளும் வகுப்பாசிரியையிடம் தெரிவித்துள்ளதுடன் வகுப்பாசிரியை வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே சிறுமிகளை மீட்டு தந்தையை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகள் இருவரையும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார், சந்தேக நபரான தந்தையை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.