;
Athirady Tamil News

கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம் !!

0

நீர்கொழும்பு – ஏத்துகல பகுதியில் இன்று மதியம் கடலில் குளிப்பதற்குச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

இதில், காணாமல் போன மூன்று இளைஞர்களும் டயகம, சுன்னாகம் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், அவர்கள் 20 – 23 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.