;
Athirady Tamil News

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து !!

0

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார்.

ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட போதே விபத்து ஏற்பட்டது.

இதன்போது பார ஊர்தி சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த பகுதியில் உள்ள புகையிரத கடவையில் பல தடவைகள் விபத்து ஏற்பட்ட போதிலும் காவலாளிகள் நியமிக்கப்படும் தொடர்பிலும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.