;
Athirady Tamil News

சீனா பள்ளியில் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து 10 பேர் பலி!!

0

வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் 160-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளை அகற்றி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 10 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.